திருநான்மறை விளக்க ஆராய்ச்சி
₹450.00
ஆசிரியர்: மா. சாம்பசிவ பிள்ளை
பக்கங்கள்: 418
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
- திருச்சியைச் சேர்ந்த இந்நுாலாசிரியர், 1926 ஆம் ஆண்டு வெளியிட்ட நுாலின் மறுபதிப்பு இது
- அக்காலகட்டத்தில் செந்தமிழ்ச் செல்வி இதழில், கா. சுப்பிரமணிய பிள்ளை, ‘திருநான்மறை விளக்கம்’ என்ற பெயரில், தமிழில் நான்மறைகள் இருந்ததாகவும், அவற்றை கடல் கொண்டு விட்டதாகவும், அவற்றை வடமொழியில் ஆரியர்கள் மொழிபெயர்த்து வைத்துக் கொண்டதாகவும், அதற்கு சான்றுகளாக திருமுறைகளில் சில சொற்கள் இருப்பதாகவும் கொண்டு, கா. சு. பிள்ளை எழுதி வந்தார்
- அவரது கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில், திருமுறைகளையும் சாத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மறுப்பு நுால் இது
- இந்நுாலைப் பற்றியும் இதன் மையக் கருத்தைப் பற்றியும் மொத்தம் 27 சைவச் சான்றோர் கருத்துகள் தெரிவித்துள்ளனர். அக்கருத்துகள் நுாலின் முதல் பகுதியில் இடம்பெற்றுள்ளன
- சைவ சமயத்தில், வடமொழியா, தென்மொழியா என்ற கருத்து மோதல் நடைபெற்ற காலத்தில் வெளியான நுால் என்பதால் இந்நுாலின் முக்கியத்துவம் அதிகமானது








