ஸ்ரீகச்சியப்ப சிவாச்சாரியார் புராணம் (மூலமும் உரையும்)
₹100.00
ஆசிரியர்: சிதம்பரம் வாமதேவ முருக பட்டாரகர்
உரையாசிரியர்: சைவ. இராம. மாணிக்கவாசகன்
பக்கங்கள்: 96
வெளியீடு: ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம்
- பத்தொன்பதாம் நுாற்றாண்டில் சைவ இலக்கியங்களை அச்சிட்டுப் பரப்பியவர்களில் குறிப்பிடத்தக்கவர், சிதம்பரம் வாமதேவ முருக பட்டாரகர். சிவாச்சாரிய மரபினர்
- இவர் முருகப் பெருமானிடத்துப் பெரும் பக்தி கொண்டவராகத் திகழ்ந்ததால், கந்தபுராணம் அருளிய கச்சியப்ப சிவாச்சாரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் புராணமாகப் பாடினார்
- மொத்தம் 189 செய்யுட்களில், அவ்வரலாற்றை அழகிய தமிழில் செய்யுட்களாகப் பாடினார்
- 1917 ஆம் ஆண்டுக்குப் பின் தில்லை கார்த்திகேய சிவம் இந்நுாலை, கூனம்பட்டி ஆதீனப் புலவர், சைவ. இராம. மாணிக்கவாசகன் மூலம் உரை எழுதி, மறுபதிப்பு செய்துள்ளார்
- சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நுால்






