அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருவகுப்பு – பாடல்களும் விளக்கமும்
₹120.00
ஆசிரியர்: முனைவர் வி. சி. சசிவல்லி
பக்கங்கள்: 149
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
- அருணகிரிநாதர் பாடியனவாக இன்று நமக்குக் கிடைப்பன 1320 திருப்புகழ் பாடல்கள்
- இவை தவிர, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு எனப் பல பாடல்களைப் பாடியுள்ளார்
- இந்தத் திருவகுப்புகள், முருகவேள் பன்னிரு திருமுறையில் ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன
- அருணகிரிநாதர் பாடியனவாக இன்று, சீர்பாத வகுப்பு முதல் திருப்பரங்கிரி வகுப்பு வரை 25 திருவகுப்புகள் கூறப்படுகின்றன
- இவற்றைத் தொகுத்து, தனித்தனியாக விளக்கமும் அளித்துள்ளார் நுாலாசிரியர்
- தேவார ஒளிநெறி வரிசை நுால்களை வெளியிட்ட தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்களின் மகளார் தான் இந்நுாலையும் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது
- அருணகிரிநாதர் அடியார்கள், சைவ அன்பர்கள், தமிழ் அன்பர்கள், ஆய்வாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்நுால் பெரும் பொக்கிஷம்




